Technical College Lecturer Exam: 3,164 people from Perambalur-Ariyalur districts wrote.

தமிழ்நாடு ஆசிரியர் (TRB) தேர்வாணையம் சார்பில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வுகள் இன்று (16.09.2017) பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 11 மையங்களில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட வருவாய் அலுவலர் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடங்களை நேரில் பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 30 மாற்றுத் திறனாளிகள் உட்பட 3,793 நபர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. 3,164 நபர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். 629 பேர் தேர்வெழுத வருகை தரவில்லை.

அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!