The python caught and handed over to the forest near the village PERAMBALUR
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் இன்று காலை ஏரி வரத்து வாய்க்கால் வழியாக ஊருக்குள் 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் பிடித்து வைத்தனர். உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில், ஒகளுர் கிராமத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மலை பாம்பை பிடித்து பேரளியில் உள்ள வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.