The VCK Cadres complaint against BJP Tamilisai has been reported as a defamatory statement of VCK Thirumavalavan

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மனு கொடுத்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் தொல்.திருமாவளவனையும் திட்டமிட்டு அவதூறு பரப்பும் பா.ஜ.க தமிழ் மாநில தலைவர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார். அப்போது வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் இரா.சீனிவாசராவ், ஒன்றிய செயலாளர் எம்.பாஸ்கர், வேப்பநதட்டை ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அழகுவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதே போன்று குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி குன்னம் காவல் நிலையத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497