Today, 475 people in a single day, including sub-collector in the district to ensure that Corona virus infections!
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 5 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சப்-கலெக்டர் பத்மஜா உள்பட 475 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,825 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,496 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை பதிவானதில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்