Tomorrow is happening in Perambalur ! Wedding Ceremony of Sree Amman Bankers Group  Founder’s  Family!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனையகம், ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை என்.எம். ரெசிடென்சி, என்.எம்.கிளினிக், உள்ளிட்ட ஸ்ரீஅம்மன்பேங்கர்ஸ் குழுமத்தின் நிறுவனர் ந.முத்தையா-விஜயாமுத்தையா இவர்களது மகனும், என்.எம்.கிளினிக் டாக்டர் திலீபன்முத்தையாவிற்கும், அந்தமான் பொதுப்பணித்துறை அலுவலர் செல்லபெருமாள் மற்றும் அந்தமான கல்வித்துறையில் பணிபுரியும் சவுந்தரவள்ளியின் மகளும், அந்தமான் நிகோபார் தீவு, இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.என்.ஐ.ஐ.எம்.எஸ்.) நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ஷில்பிகாதேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் ஓட்டல்ஸ் திருமணமகாலில் நாளை திங்கட்கிழமை காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. மணமக்கள் அழைப்பு நிகழ்ச்சி இன்று மாலை 6மணிக்கு நடக்கிறது.

திருமண விழாவில் கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தக பிரமுகர்கள், ரியல்எஸ்டேட் ஹவுசிங் புரொமோட்டர்கள், மருத்துவத் துறையினர், மிராசுதார்கள், ரியஸ்எஸ்டேட் முகவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். திருமணவிழாவில் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதிக்குமாறு, ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழும நிறுவனர் முத்தையா-விஜயா மற்றும் டாக்டர் அறிவொளிமுத்தையா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!