Two persons arrested goondas act in Perambalur

பெரம்பலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரராஜ் மகன் பிரவீன் (வயது 26). மற்றும் பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமம் அம்பேத்கார் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயக்குமார் (வயது 27) ஆகிய இருவர் மீதும் பெரம்பலூர், மருவத்தூர், குன்னம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா குண்டர் சட்டத்தில் அடைக்க உத்திரவிட்டார். அதன் பேரில் திருச்சியில் மத்திய சிறைத்துறை அதிகாரி உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!