Unidentified old woman dies after being treated as an inpatient at Perambalur Government Hospital: Police are investigating!
பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் இன்று 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார். இது குறித்து, பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர், யார் என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.