vacancy in Social defence Institutes || சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடம்

சமூகப் பாதுகாப்புத்துறையின் நிறுவனங்களில் காலியாக உள்ள வாத்தியக்குழு ஆசிரியர் (3 காலிப்பணியிடம்), புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர் நிலை-1 (3 காலிப்பணியிடம்), புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர் நிலை-2 (ஒரு காலிப்பணியிடம்), தச்சுப் பயிற்றாசிரியர் நிலை-ஐ (3 காலிப்பணியிடம்), தச்சுப் பயிற்றாசிரியர் நிலை- 2 (ஒரு காலிப்பணியிடம்) ஆகிய பணியிடங்களை சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயின்று வரும் மாணவ மாணவியர்களைக்கொண்டு நிரப்பப்பட உள்ளது.

மேற்படி பணியிடங்களுக்கு தகுதியானவா;கள் அதற்கான படிவத்தினை www.perambalur.tn.nic.in <http://www.perambalur.tn.nic.in , என்ற பெரம்பலூர் மாவட்ட வலைதளம் அல்லது http://www.socialdefence.tn.gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து உரிய கல்வி, வயது, தொழிற்கல்வி மற்றும் இதர சான்றுகளுடன் முன்னாள் மாணவ – மாணவியர் என்பதற்கான சான்றின் ஒளிநகலுடன் 10.05.2017க்குள் ‘ஆணையர், சமூகப்பாதுகாப்புத்துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை 600 010, தொலைபேசி எண்.044-26426421 – 26427022 என்ற முகவரிக்கு சேரும் வண்ணம் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், இது தொடர்பான கூடுதல் விபரங்களை மேற்கண்ட வலைதளங்களில் தெரிந்து கொள்ளலாம், என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!