Visvagudi Reservoir was flooded by continuous rains: water discharge; Perambalur Collector Visited!
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த வரும் தொடர் பருவமழையால், பச்சமலையில் ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு காரணமாக விசுவகுடி நீர்த்தேக்கத்தில் நேற்று நிரம்பியது. அதனை யொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், மதகு திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இன்று காலை, கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று மதகை பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.