Woman beheaded in Perambalur in broad daylight: Police investigation
பெரம்பலூர் அருகே நடந்த பட்டப்பகலில் பெற்றத் தாயை கழுத்ij அறுத்து கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் பெண் ஒருவர் கொலையுண்டு கிடப்பதாக கிடைத்த தகவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த கைலாசம் மனைவி சோலையம்மாள் (வயது 70), என்பதும், செஞ்சேரியில் வசிக்கும், அவரது மகன் செல்வராஜ் (வயது சுமார் 42) கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், தப்பிய செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். சோலையம்மாளின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு போலீசார் கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.