பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் விடுதி விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு கல்லூரி முதல்வர் சுகிதா ராணி ஜூலினா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி லலிதாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக விடுதி காப்பாளர் ரங்கநாயகி வரவேற்று பேசினார். முடிவில் மாணவி அகல்யா நன்றி கூறினார்.