பெரம்பலூர்: பெரம்பலூர் நகர் துறைமங்கலத்தில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடந்தது.

துறைமங்கத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் புதிதாக
கோயில் கட்டப்பட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம்
11ம் தேதி பாலாபிஷேம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.35 லட்சம் செலவில் புதிதாக கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி 20ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜைகள் தொடங்கியது, தொடர்ந்து மாலை 5மணிக்கு யாகசாலை பூஜையும், தீபாராதனையும், 21ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

தொடர்ந்து 22ம் தேதி இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும், மூலவர் குபேர கணபதி கும்பாபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.

காலை 9 மணியளவில் யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10 மணியளவில் விமான கோபுர கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மகா மாரியம்மன் மூலவர் கும்பாபிஷேகம், குபேர கணபதி ,துவார பாலாகி சுவாமிகளுக்கு கும்பாபிஷேமும் நடந்தது.

துறைமங்கலம், பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!