Will the municipal action take place in Perambalur? Public expectation!
பெரம்பலூர் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா! பெரம்பலூர் ரோஸ் நகரில் இருந்து ரோவர் பள்ளி செல்லும் வழியில் பாதாள சாக்கடை மேன் ஹோல் உடைந்து கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி வாசிகள் கடும் சிரமம் அடைந்து வருவதால், நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.