வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியிலுள்ள வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம் ஆகிய ஊர்களில் வணிகர்கள் அனைவரும் ஒன்றினைந்து முன்னாள் ஜனாதிபதியும், மனிதாபியுமான விஞ்ஞானி அப்துல் கலாம் மறைவிற்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடையடைப்பு செய்து அப்துல்கலாம் உருவ படத்துடன் மவுன ஊர்வலம் நடத்தினர்.
வேப்பந்தட்டை மற்றும் கிருஷ்ணாபுபுரத்தில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் வணிகர்களுடன் பொதுமக்களும் இணைந்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் நகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.