Awareness campaign on corona vaccination camp to be held tomorrow in Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தில் 193 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி கலெக்டர் வெங்கடபிரியா இன்று காலை, எளம்பலூர் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அருகில் திட்ட அலுவலர் லலிதா, ஊராட்சித் தலைவர் கே.சித்ராதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதே போன்று செஞ்சேரி, ரெங்கநாதபுரத்திலும் நடத்தப்பட்டது.