Breaking the locks of 3 unoccupied houses in Perambalur and robbing 15, Rs 3 lakh

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் எதிர் சாலையில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும், ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ராணி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் உள்பட லேப்டாப்பையும்,
அதே வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும்,
பொன்னுசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 விலை உயர்ந்த செல்போன்களையும் மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!