Crop Insurance for Groundnut and Onion Crops: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலக்கடலை, செஞ்சோளம் மற்றும் சின்னவெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 31.08.2021 தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பன்பெறலாம்.

நிலக்கடலை, செஞ்சோளம் மற்றும் சின்னவெங்காயம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான பிரிமியம் தொகை முறையே ஏக்கருக்கு ரூ.442-, ரூ.228- மற்றும் ரூ.1,976- ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பீரிமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

தற்பொழுது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சின்னவெங்காயம் பயிர் காப்பீடு செய்ய இயலாது. விதைத்து 1 மாத பயிரான சின்னவெங்காயம் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய இயலும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!