Perambalur: 2 calves die after being bitten by dogs; Farmer demands compensation!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பழைய விராலிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் சுரேஷ் (43), விவசாயி. இவர் புதுஅம்மாபாளையம் – செட்டிகுளம் சாலையில் இவரது வயலில் 5 பசுக்கள், 4 கன்றுக் குட்டிகளை வளர்த்து வந்தார். இன்று காலை மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சுரேஷ் சென்று பார்த்த போது 2 கன்று குட்டிகள் நாய் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் வி.ஏ.ஓ-க்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சுரேஷ் தெரிவித்ததாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், இறந்த கன்றுக்குட்டிகளுக்கு அரசு இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார்.