Perambalur: A 2-year-old boy who was trying to get his sister off the school bus was killed after being hit by the wheels of the bus!

பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராவேல் – சந்தியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. முதல் குழந்தை விசித்ரா வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். விசித்தராவை சந்தியா பள்ளிப் பஸ்சில் ஏற்றி விட மற்றொரு குழந்தையான சண்முகவேலு (2) -வை உடன் அழைத்து வந்துள்ளார். விசித்ராவை பஸ்சில் ஏற்றி விட்ட போது அருகில் இருந்த குழந்தை சண்முகவேல் பள்ளி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!