Perambalur: A moving lorry caught fire and was destroyed!
திருச்சியில் இருந்து நேற்றிரவு 11 மணிக்கு, சென்னைக்கு மணல் ஏற்றி கொண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. லாரி அயன்பேரையூர் பகுதியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ரேடியல் டயர்களில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ இல்லை அதிர்ஷ்ட்வசமாக ஏற்படவில்லை.