Perambalur: Lawyers announce one-day boycott of court work!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் சங்க தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று மாலை நடந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த வழக்கறிஞர் குமரன் மீது தாக்குதல் நடத்திய ஆதமங்கலம் காவல் அதிகாரியை கண்டித்தும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை ஒரு நாள் மட்டும் சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.