Perambalur: Minister Sivashankar issued orders for apprenticeship training to ITI students!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ்பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 312 மாணவர்களுக்கு பெரம்பலூரில் உள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், லப்பைகுடிகாடு பேரூராட்சித் தலைவர் அ.ச.ஜாகிர் உசேன் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.