Perambalur police rescued a mentally ill person who was wandering around and handed him over to his parents!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த ராஜ் (எ) கார்த்தி (27) என்ற நபரை கடந்த 31.12.2019- ம் தேதி மீட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் கருணை இல்லத்தில் மனநல மருத்துவர் மூலம் மேற்படி நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக் எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து மற்றும் சித்ரா, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா, மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்கள் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக்கின் தந்தை அன்பழகனிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.