Perambalur: Sheep worth Rs. 10 lakhs stolen: Police investigating!
பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழைமேடு கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கருப்பையா (65). விவசாயியான இவர் விவசாயத்துடன் துணை தொழிலாக ஆடு மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு பின்னர் வயலில் தற்காலிகமாக நரம்பு வலை மூலம் பட்டி வேலி அமைத்து வெள்ளாடுகளை அடைத்து விட்டு, இரவு உணவை சாப்பிட வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் திரும்பி சென்று வயலில் பார்த்த போது, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 68 வெள்ளாடுகள் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பையா வெள்ளாடுகள் திருடு போன தகவலை போலீசுக்கு தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழை விவசாயி ஒருவரின் 68 வெள்ளாடுகள் திருடு போன சம்பவம் அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.