Perambalur: Used car dealers protest, demanding that RC books be delivered in person instead of being sent by post!
பெரம்பலூர் ஆர்.டி.ஓ ஆபீஸ் முன்பு தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின், பெரம்பலூர்மாவட்டகார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வாகன வியாபாரிகள் நலனில் கவனம் செலுத்த வேண்டும், வாகன வியாபாரிகள் கோரிக்கையை ஏற்பதுடன், போக்குவரத்து துறை அலுவலர்களின் மெத்தன போக்கை கைவிடவேண்டியும், ஸ்மார்ட் கார்டு இல்லை என்று RC அனுப்பாமல் காலம் தாழ்த்துவது, 1989 – ம் வருட வாகன சட்டத்தில் 430 பிரிவின்படி உரிய ஒப்புதல் கடிதம் உள்ளவர்களிடம் RC யை வழங்க வேண்டும், போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் பற்றாக்குறை சரி செய்ய வேண்டும்,
போக்குவரத்து அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட பின்னரும், ஆர்.சி வேலைகள் காலதாமதமாவதை தவிர்க்க வேண்டும், கணினி மயமாக்கப்பட்ட நிலையில் ஹெச்.பி கேன்சல் அந்தந்த அலுவலகங்களில் செய்வதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.