Police who destroyed and defused the explosives seized in the cases!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட, 350 நைட்ரேட் மிக்சர், 96 டெட்டர்னேட்டர்கள், 95 ஜெல்ஸ்டிக், ஆர்.டி.எக்ஸ் ஆகியவைகள் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்டது. அதனை இன்று அழித்து செயலிழக்கம் செய்ய குற்றவியல் நீதித்துறை நடுவர் மூலம் ஆணை பெற்று, திருச்சி மாநகர காவல்துறை வெடிபொருள் கண்டறியும் மற்றும் செயலிழக்க பிரிவு மூலம் இன்று மாலை 04.00 முதல் 06.00 மணி வரை தொண்டைமாந்துறை -வெங்கலம் மலைப்பகுதியில், வெடித்தும், அழித்தும், செயலிழக்கம் செய்தனர். அப்போது வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க பிரிவினர், வருவாய்துறையினர், மருத்துவ குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறை புகைப்பட நிபுணர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.