Special petition camp of police to resolve land issues near Perambalur!
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று தாலுகா அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் 30 மனுக்கள், பெறப்பட்டு அவற்றில் 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில், பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி மனோகரன், தாசில்தார் பாலசுப்ரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அ.ரஞ்சனா, மற்றும் காவலர்களும், வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.