Tali chain pound jewelery snatched from sleeping grandmother near Perambalur: Police investigation
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் லூர்து அன்னைத் தெருவைச் சேர்ந்தவர் கமலம் (வயது70). இவர் அதே கிராமத்தில் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது மகள் ஹெலன் இன்பராஜ் வீட்டில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் கமலம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கமலம் அளித்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.