2 women trying to set fire to the Perambalur Collector’s office
பெரம்பலூர்கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்வதை கண்ட பெண்போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்களை சுவாசப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமரச் செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான் மனைவி நவாப்பீ (வயது 34). என்பதும், மற்றொரு பெண் நவாப்பீ-யின் தாயார் கதீஜா பீ என்பதும், இவர்களுக்கு, இன்று காலை அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுடன், பாதை பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு காவல்துறை வருவாய்துறை ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தீக்குளிக்க முயற்சித்தனர் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் காலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!