400 kg Onion robbery in a farmer’s field near in Perambalur.

பெரம்பலுார் அருகே, உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல்,35, இவர், தனது வயலில், சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று சக்திவேல் சென்று பார்த்த போது, வயலில் இருந்த, சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மருவத்துார் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். புகாரின்பேரில், மருவத்துார் போலீசார் வழக்கு பதிந்து, வெங்காய திருடர்களை தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!