46th Annual Gifted and Appreciation Ceremony of the Tamil Nadu Graduate Teachers’ Association, Perambalur
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 46 ம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணி, மாவட்டப் பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சுந்தரபாண்டியன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் மாநில தலைவர் நல்லுசாமி, முன்னாள் மாநில துணைத் தலைவர் தங்கராஜ், முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் பீட்டர்ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் சீனிவாசன், கவுரவ தலைவர் பாபுவாணன் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
அச்சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களையும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களையும், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் பாராட்டி, பரிசுகள் வழங்கி ரெ.வாசு கவுரவித்தார். இதில், மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெரும் திரளாக கலந்து கொண்டனர்.