48th Anniversary Commemoration of AIADMK
பெரம்பலூரில், அ.தி.மு.கவின் 48-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் ஆ. அருணாசலம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக கொடி ஏற்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.