About 50 people from oppose parties joined the Perambalur AIADMK in the presence of RT Ramachandran MLA.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த திமுக ஊராட்சி பிரதிநிதி பெரியசாமி மற்றும் அமமுக ஊராட்சி பிரதிநிதி ராமராஜ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி, பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அப்போது ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர் பலர் உடனிருந்தனர்.