Admission ticket to go outside to buy items in 3 different colors: Perambalur AR DSP Ravi gaved

பெரம்பலூர் ஆயுதப்படையிலுள்ள காவல்துறையினர் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரவி வழங்கி தொடங்கி வைத்தார்.

தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வோருக்கு 3 வண்ணங்களை கொண்ட அனுமதி சீட்டுகளை வழங்கினார்.

நீல நிற அட்டையானது திங்கள் மற்றும் வியாழன் தினத்தன்றும், சிவப்பு நிற அட்டையானது புதன் மற்றும் சனி தினத்தன்றும், மஞ்சள் நிற அட்டையானது செவ்வாய் மற்றும் வெள்ளி தினத்தன்றும் குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வெளியில் சென்று காலை 06.00 முதல் மதியம் 01.00 மணிவரை மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!