An unidentified male body was investigated police near Perambalur new bus stand

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்க தக்க ஒருவர், இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் ஆய்வில் இறந்து கிடந்தவர் மஞ்சள் நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார். இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தை 04328177120 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!