Bhoomi Pooja for Polling Machine Warehouse Building at Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் இருப்புக் கிடங்கு கட்டடப் பணிகள் நடைபெற உள்ளது. அதனையொட்டி, இன்று கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் வே. சாந்தா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ ராஜேந்திரன், ஆர்.டி.ஓ சுப்பையா, செயற்பொறியாளர் தனவேல், தாசில்தார் பாரதிவளவன் மற்றும் ஒப்பந்தாரர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.