Bhoomi Pooja to for Perambalur district Home Guard police force!

பெரம்பலூர், ஜன.28- பெரம்பலூர் கடைவீதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மண்டல தளபதி சொந்த நிதியில் இருந்து ரூ.5லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பூஜைகளை செட்டிகுளம் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.

இதில் ஊர்க்காவல்படை மண்டல கமாண்டர் ராம்குமார், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், அரிமா சங்க மாவட்ட தலைவர் இமயவரம்பன், ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாரத் கார்த்திக், ஊர்க்காவல் படை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் போக்குவரத்து போலீசாருக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு முகக் கவசங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!