Blood Donate Camp on behalf of DMK Youth Wing : A. Raja inaugurated.

பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை அக்கட்சியினர் இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இதை முன்னிட்டு 65 பேர், அரசு தலைமை மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கும் முகாமை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ. இராஜா தொடங்கி வைத்தார். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்தின், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பசும்பலூர் ஊராட்சி செயலாளர் ஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை (பெரம்பலூர்), தி.மதியழகன் ( வேப்பூர் ), பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரகாகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் ரத்த தானத்தை பெற்று ரத்த வங்கியில் சேமித்து வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!