Chief Minister Edappadi.K Palanisamy inaugurated new buildings worth Rs. 1.62 Crore

பெரம்பலூர் துறைமங்கலத்தில் ரூ.89.19 லட்சம் மதிப்பில் கியூபிராஞ்ச் (குற்ற புலனாய்வுத்துறை)க்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் பெரம்பலூர் ஆலத்தூர் வட்டத்தில் ரூ.72.05 இலட்சம் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி நேற்று, சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வே.சாந்தா குத்துவிளக்கேற்றி, கட்டிடத்தை பார்வையிட்டார்.

இதில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, திருச்சி சரக கியூ பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், மாவட்ட கருவூல அலுவலர் பார்வதி, துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!