Citizens road traffic demanding drinking water near Kailakathur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட கைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பபட்ட பாதாங்கி கிராமத்தில் இன்று காலை ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க முறையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கைகளத்தூர் போலீசார், மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை விலக்கி கொண்டு கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!