College students near Perambalur protest the removal of course for the 2nd day
![](https://www.kalaimalar.com/wp-content/uploads/2019/06/Perambalur-BDU-Students.jpg)
File Copy
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளில் 11 பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் துறையூர் 10 நிமிடமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவ மாணவிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.