Construction work worth Rs. 88.70 lakhs in Kurumbalur Municipality: Perambalur Collector visited.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான பொது கட்டிடங்கள் ரூ.88.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இருளர் காலனியில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் அமைப்புடன் கூடிய புதிய போர்வெல் கட்டிடமும், ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்களுக்கான புதிய கழிப்பறைகளும், ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிப்பறைகளும், ரூ.35 லட்சம்; மதிப்பீட்டில் 980 மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகளும், ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் பாதையும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடமும், நிர்வாக மற்றும் சில்லரைச் செலவினம் ரூ.2.50 லட்சம் என மொத்தம் ரூ.88.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது,
பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், நிர்வாக அலுவலர்கள் தியாகராஜன், சதீஸ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.