Corona; Auto Association in Perambalur to demand relief
பெரம்பலூரில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு, தற்போது கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக மாதம் ரூபாய் 15 ஆயிரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், சமூக இடைவெளியுடன் கூடிய ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும், தனியார் அரசு வங்கி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும், இன்சூரன்ஸ், சாலை வரி போன்ற கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்களை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர், பின்னர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து கலைந்து சென்றனர். இதில் மாநில பொறுப்பாளர் அகஸ்டின் உள்பட, சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டர்.