Corona : relief on behalf of AIADMK for Sri Lankan Tamils living in Perambalur

கொரனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் நிர்வாண பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். பெரம்பலூர் நகர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் அறிவுறுத்தலின் படி பெரம்பலூர் நகர கழக செயலாளர் ஆர்.இராஜபூபதி 10 கிலோ அரிசி மற்றும ரூ.500 நிதியை 100 பேருக்கு வழங்கினார். நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சிவக்குமார், அண்ணா நகர் காந்திநகர் ஆகிய பகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் நகர அவைத்தலைவரும் முன்னால் நகர கவுன்சிலருமான பேபி காமராஜ் மற்றும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் புவழேந்திரன், பிரபு மற்றும் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!