Corono infestation echoes: Officials sealed for Perambalur daily vegetable market!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. குறைந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகள் வாங்க வந்து செல்வதாலும், இடைவெளி நின்று வாங்குவதற்கு போதிய இடம் இல்லாததால், அதிகாரிகள் மார்க்கெட்டிற்கு தற்போது சீல் வைத்தனர். இன்று மாலை முதல் உழவர் சந்தை பகுதியில் உள்ள திறந்த வெளி பகுதியில் அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று காய்கறி விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.