Court boycotted by lawyers in Perambalur

பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கடந்த 11-ந்தேதி வழக்கறிஞர் என்.எஸ். இளங்கோவன், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டதை கண்டித்தும், போலீஸ்நிலைய சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வெளிப்படையாகவும், நியாய-நேர்மையின்படியும் விசாரணை நடத்தி இளங்கோவனை தாக்கிய போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள், நிலைய எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஒருநாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானித்தின்படி அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!