Demonstration in Perambalur on behalf of the People’s Rights Movement demanding the creation of Cauvery management
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி நிலை அருகே மக்கள் உரிமை போராட்டக் குழு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டதுடன் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டி உரையாற்றினர்.
போராட்டத்தில், மதிமுக., வி.சி.க., கம்யூனிஸ்ட், தி.க., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.