Demonstration on behalf of DMK near Perambalur demanding proper formation of Co-op elections

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தேர்தல் நடத்தாமல் அ.தி.மு.க.வினரை தன்னிச்சையாக நியமனம் செய்து பட்டியல் ஒட்டப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க வினர் பசும்பலூர் தொடக்க வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் மற்றும் பசும்பலூர் கிளை செயலாளர் ஜெயபால் உள்ளிடட தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

பின்னர் அனைவரும் கலைந்து சென்று, முறையாக தேர்தல் நடத்தி பொருப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூட்டுறவு மாவட்ட பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!