DMK signing public to withdraw federal citizenship bill!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் ,புதிய பேருந்து நிலையத்தில் நகரச்செயலாளர் எம்.பிரபாகரன் தலைமையில் மாவட்ட செயலாளர், குன்னம் சி இராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்- மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் தங்கமயில் செந்தில், ஜே.எஸ்.ஆர்.கருணாநிதி, மாவட்ட பொறியாளர் அணி துனை அமைப்பாளர் மூர்த்தி, வார்டு கழக செயலாளர்கள் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, கார்த்திகேயன், சுரேஷ், துறைமங்கலம் எம். மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.