flag pole damage to the MGR forum in Perambalur!

பெரம்பலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நான்கு ரோடு பகுதியில் டீ கடை ஒன்றின் முன் எம்ஜிஆர் மன்றம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

உரிய அனுமதி பெற்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை மர்ம நபர்கள் யாரேனும் உடைத்து நொறுக்கினரா? அவ்வழியே வந்த வாகனம்
கவனக்குறைவால் மோதி கொடி கம்பம் சேதப்பட்டதா? அல்லது டீ கடைக்கு இடையூராக உள்ளது என டீ கடையினர் உடைத்தனரா? என பல்வேறு கோணத்தில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள டீக்கடையின் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!